in

திமுக சார்பில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ரெட்டனையில் நடைபெற்றது

திமுக சார்பில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ரெட்டனையில் நடைபெற்றது

 

முதலமைச்சர் செய்த பல்வேறு சாதனைகள், திட்டங்களின், வாயிலாகவும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உழைப்பிற்கு நாம் அனைவரும் ஈடு கொடுத்து உழைத்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தெரிவித்தார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி மைலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ரெட்டனையில் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் சேகர் தலைமையில் மைலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர்.சேகர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் 3 ஆண்டு காலங்களில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி உள்ளார் குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக உள்ளன.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உழைப்பிற்கு நாம் அனைவரும் ஈடு கொடுத்து உழைத்தால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் வெற்றி பெற்று காட்டிய வரலாறு தி.மு.கவுக்கு உள்ளது.

அதேபோல் பர்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவை படுதோல்வி அடைய செய்தது திமுக.

புதிதாக வருபவர்கள், இயக்கம் ஆரம்பிப்பவர்கள், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் ஒரு கற்பனையாக இருக்கலாம்.

ஆனால் திமுக பொருத்தவரை தலைமுறை தலைமுறையாக வாழையடி வாழையாக வந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

அந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாகபெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் செயல் படுத்தி வருவதாக அமைச்சர் செஞ்சி.மஸ்தான் பெருமிதம் தெரிவித்தார்.

கூட்டத்தில்திமுக கழக முப்பெரும் விழாவில் திமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, கழக ஆக்கப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றிய பெருந்தலைவர்கள் மைலம் யோகேஸ்வரி மணிமாறன், வல்லம் அமுதா ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் வீடூர் ரவி, ஒன்றிய துணைப் பெருந்தலைவர் புனிதா ராமஜெயம், மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயன், மகேஸ்வரி குமரேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜ் பரத் பரிகாசம் சுதின் உமா ஞானசேகர், சாந்தகுமார் செல்வகுமார், கண்ணன், நிவேதிதா ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரமேஷ், பூங்கா பாக்யராஜ், மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், ஒன்றிய நிர்வாகிகள் முனியாண்டி, பாஸ்கர், சேகர், பிரபு, உதயவாணன், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

நடிகர் விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்

முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தொடங்கி வைத்து பேச்சு