in

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூங்கில் தோட்டம் பகுதியில் 7 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில் மயிலாடுதுறை அருகே நலத்துக்குடி வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் என்ற 44 வயது நபர் செல்போனில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த நபர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. போதையில் செய்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

சீர்காழி அருகே பனங்காட்டு மாரியம்மன் கோயில் காவடி திருவிழா

சங்கரன்பந்தலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.