in

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம்

 

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம். நல்வாய்ப்பாக 27 பேர் உயிர்த்தப்பினர்.

திருநெல்வேலியில் இருந்து செந்தூர் வேலன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது.

27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற இந்த தனியார் பேருந்து, திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தை கடந்த போது திடீரென டயர் வெடித்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது..

What do you think?

சூரிய ஒளியால் பொன் நிறத்தில் ஜொலித்த காசி விஸ்வநாதர்…

ரேஷன் கடையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திடீர் ஆய்வு