in

நத்தத்தில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

நத்தத்தில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – ஊர்வலத்தின் போது குத்தாட்டம் போட்ட 2 வயது சிறுவன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி இந்து முன்னணி சார்பில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபட்டு வந்தனர். நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் நத்தம் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் ஊர்வலமாக நத்தம் பேருந்து நிலையம், காந்தி கலையரங்கம், அவுட்டர் வழியாக அம்மன் குளம் சென்றடைந்தது.

இந்த ஊர்வலத்தின் போது இசைக்கேற்ப 2 வயது சிறுவன் போட்ட குத்தாட்டம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே மகிழ்ச்சி அடைய செய்தது.

இந்த ஊர்வலத்தில் திண்டுக்கல் ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

What do you think?

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி அருள்மிகு ஶ்ரீ வெங்கல நாச்சியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

நத்தம் அருகே இளைஞரின் முயற்சியால் ஆதரவற்ற மூதாட்டிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான புதிய வீடு கட்டி திறக்கப்பட்டது