in

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சிதம்பரத்தில் மீலாது விழா சமய நல்லிணக்க பெருவிழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சிதம்பரத்தில் மீலாது விழா சமய நல்லிணக்க பெருவிழா

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சிதம்பரத்தில் மீலாது விழா சமய நல்லிணக்க பெருவிழா நடந்தது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மீலாது நபி சமய நல்லிணக்க பெருவிழா, மற்றும் வக்ஃபு வாரிய சேர்மன் நவாஸ்கனிக்கு பாராட்டு விழா சிதம்பரத்தில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை செயலாளர் அப்துல் ரகுமான் ரப்பானி துவக்க உரையாற்றினார்.

விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று பாராட்டி பேசினார். விழாவில் தருமபுரம் ஆதீனம் மடத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி எம்பியுமான நவாஸ் கனி பங்கேற்று ஏற்புரையாற்றி பேசினார்.

விழாவில் முக்கிய நிகழ்வாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இங்விழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

What do you think?

கணவரை பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேகம்