in

திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேலகொருக்கை சாய் ஸ்ரீநிவாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவாக அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அறிவியல் கண்காட்சி இன்று பள்ளியில் நடைபெற்றது

இதில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் கற்கால மனிதன் முதல் சந்திராயன் வரை பலவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்
கண்காட்சியை பள்ளி தாளாளர் கஜராலெட்சுமி பள்ளி குழும தலைவர் வெங்கடேசன் ஆகியோர் துவங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்று கண்காட்சியை கண்டு ரசித்தனர் .

What do you think?

கொடைக்கானல் மேல் மலை பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பேட்டி

அதிமுக பேரூராட்சி செயளாலர் மீது திமுக மாவட்ட பொருளாளர் கொலை வெறி தாக்குதல்