in ,

சிவகங்கை ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது

சிவகங்கை ஶ்ரீ விஸ்வநாதர் திருக்கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் உற்சவ பெருவிழா நிறைவாக ஊஞ்சல் சேவை வைபவம் நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் விசாலாட்சி அம்பாளை சர்வ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து பக்தர்கள் ஊஞ்சல் பாடல்களை பாடி அம்மனை வழிபாடு செய்தனர்.

பின்னர் அம்பாளுக்கு தீப தூப ஆராதனை காண்பித்து கோபுர தீபம் கும்ப தீபம் நாகதீபம் ஏகமுக தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் பெருமாள் மகாலட்சுமி திருக்கல்யாணம்

தஞ்சை பெருவுடையார் கோவில் தென் திருகயிலாயம் பெளர்ணமி வலம்