in

மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

புதுச்சேரி…மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஐடிஐ அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், ரெட்டியார் பாளையம் புதுநகரை சேர்ந்த சங்கர் (25), என்பதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கஞ்சா போட்டலங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

What do you think?

நாகை அருகே இந்துசமய அறநிலையத்துறை சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்

கடல் சீற்றம் குறைவால் கரை பகுதிக்கு படையெடுக்கும் விதவிதமான மீன்கள்