in

அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை அபகரித்து சென்ற திருடன்

அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை அபகரித்து சென்ற திருடன்

 

கோயிலுக்குள் புகுந்து பக்தன் போல் நடித்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை ஆய்வு செய்து சரியாக தங்க தாலியை மட்டும் அபகரித்து சென்ற திருடன்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் கங்கை அம்மன் கோவில் ஒன்று உள்ளது.

அந்த கோவிலுக்கு பக்தன் போல் சென்ற திருடன் ஒருவன் யாரும் இல்லாத சமயத்தில் கருவறை வரை சென்று அம்மனை கும்பிடுவது போல் நடித்தான்.

பின்னர் அம்மன் கழுத்தில் உள்ள நகைகளை ஆய்வு செய்த அவன் அவை போலி நகைகள் என்று கண்டு கொண்டான். இதனை தொடர்ந்து அம்மன் கழுத்தில் இருந்த தாலியை ஆய்வு செய்து அது தங்கம் என்று கண்டு கொண்ட அவன் அந்த தாலியை அபகரிப்பு சென்று விட்டான்.

சற்று நேரத்தில் அங்கு வந்த கோவில் பூசாரி பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை.

இது பற்றி பூசாரி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மதனப்பள்ளி போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

What do you think?

நிஜாமாபாத் நகராட்சி கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

புதுச்சேரியில் இரண்டாவது நாளாக இரவில் கனமழை நகரம் முழுவதும் மழை நீரில் ஸ்தம்பித்தது