in

மூன்றரை வயது குழந்தை மழலை குரலில் திருப்புகழ் பாடும் வீடியோ

மூன்றரை வயது குழந்தை மழலை குரலில் திருப்புகழ் பாடும் வீடியோ

 

நாகையில் மூன்றரை வயது குழந்தை மழலை குரலில் திருப்புகழ் பாடும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரல்

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வழிபாட்டிற்கு வந்து செல்லும் நிலையில் இன்று கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதான ஆதி நிமலன் தனது பெற்றோருடன் முருகப் பெருமானை தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

அப்போது சிவன் சன்னதியில் நின்று பக்தி பாடல் பாடியுள்ளார் அதனை கேட்டு ரசித்தவர்கள் முருகன் பாடல் பாடசொல்லி கேட்டுள்ளனர். அருள்மிகு சுப்ரமணிய சுவாமி மூலவர் சந்நிதி முன்பு முத்தைத்தரு பத்தி சரவணன் என்ற அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல் பாடினார்.

இதனை அங்கிருந்தவர்கள் கைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மூன்றரை வயது குழந்தை மழலை குரலில் திருப்புகழ் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

What do you think?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடனுதவி விண்ணப்பிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (30.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News