in

கணவனுக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்த மனைவி, அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல்


Watch – YouTube Click

கணவனுக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்த மனைவி, அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல்

 

கணவனுக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்த மனைவி,அரசு மருத்துவமனையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் கணவன் ஈடுபட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் கலைவாணி, இவருக்கும் மயிலாடுதுறை சார்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். பாஸ்கர் தற்பொழுது சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான கலைவாணி அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார் தனக்கு தெரியாமல் கலைவாணி கருக்கலைப்பு செய்துள்ள நிலையில், இதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எப்படி ஒத்துக் கொண்டார்கள் என்று கூறி கணவன் தன் நண்பர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

5 மாத கரு போதிய வளர்ச்சி இல்லாமல் இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி கருக்கலைப்பு செய்ததாக கலைவாணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை எதிரே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

 7 ஊராட்சி உறுப்பினர்கள் பதயை ராஜினாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்