in

ஆவின் பால் விற்பனை நிலைய கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

ஆவின் பால் விற்பனை நிலைய கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

 

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மன நபர்கள் ஆவின் பால் விற்பனை நிலைய கடைகளின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ 20,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர் .

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் பால் மொத்த விற்பனையாளர் A.M பிரகாஷ் நடத்தி வருகிறார் இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக அதிகாலை நாலு 15 மணியளவில் அவர் கடைக்கு வந்துள்ளார்.

அப்பொழுது கடையின் பூட்டானது உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் வியாபாரம் செய்து வைத்த பணம் மற்றும் சில்லறைக்காக வைக்கப்பட்டிருந்த ஐந்து ரூபாய் இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் நாணயம் மொத்தம் 20000 ரூபாயைகொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

பிறகு அருகாமையில் உள்ள கடையிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அந்த கடையில் பணம் ஏதும் இல்லை இதுகுறித்து கடையின் உரிமையாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள CCTV பதிவை வைத்து தீவிர தேடலில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் ரத உற்சவ கொடியேற்றம்.

திண்டிவனம் – ஸ்ரீ இருசார் அம்மன் கோவில் – சித்திரை திருவிழா