கோவிலுக்கு ரோபோ யானை வழங்கிய நடிகர் சுனில் ஷெட்டி
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, PETA (People for the Ethical Treatment of Animals) இந்தியா மற்றும் CUPA(Compassion Unlimited Plus Action) உடன் இணைந்து, கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ உமாமகேஸ்வர வீரபத்ரேஸ்வரர் கோயிலுக்கு ஒரு உயரமான இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார்.
PETA இந்தியா மற்றும் CUPA உடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையும் சுனில் ஷெட்டி, ஒரு அறிக்கையில், “காட்டு யானைகள் விதைகளைப் பரப்புகின்றன, மேலும் அவை காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
யானைகள் நலன் மற்றும் பூமியின் நலனுக்காக, கடவுளின் படைப்புகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாரம்பரிய சடங்குகள் மற்றும் விழாக்களில் ஈடுபட அனுமதிக்கும் இந்த முக்கியமான திட்டத்தில் PETA இந்தியா மற்றும் CUPA உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
“இவரை போலவே சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமி கோயிலுக்கு நடிகை அடா சர்மா எந்திர யானையை வழங்கினார்.