திருப்பதி ஏழுமலையான் கோயில் சாமி தரிசனம் செய்த நடிகை மீனாட்சி சவுத்ரி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை மீனாட்சி சவுத்ரி இன்று காலை சுப்ரபாத சேவையின் போது சுவாமியை தரிசித்தார்.
தனது நெருங்கிய நண்பர்களுடன் சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமியை வழிபட்டார் தரிசனம் முடிந்ததும் கோயில் நிர்வாகிகள் அவருக்கு தீர்த்த பிரசாதம் வழங்கினர்.
தொடர்ந்து ஆலயத்திற்கு வெளியே செய்தியார்களிடம் பேசிய நடிகை மீனாட்சி சவுத்ரி முதன்முறையாக சுப்ரபாத சேவையில் சுவாமியை தரிசித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் அவருடன் பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.