நடிகை பிரியங்கா சோப்ரா திரும்பவும் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம்
நடிகை பிரியங்கா சோப்ரா திரும்பவும் இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்..
இதற்கு சமூக வலைத்தளத்தில் பல தவறான கருத்துக்கள் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இயக்குனர் ராஜமவுலி மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் ஹிந்தியில் க்ரிஷ் 4 என்ற படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க முடியவில்லை மற்றபடி யூகங்களை வைத்து வதந்திகளை பரப்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
அல்லுவுக்கு ஜோடியாக சமந்தவை நடிக்க வைக்க அட்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.