in

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி18 விழா கோலாகலம்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி18 விழா கோலாகலம்

 

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆடி18 விழா கோலாகலம் – புதுமண தம்பதியினர் மஞ்சக் கயிறு உள்ளிட்ட பொருட்களைக் வைத்து சிறப்பு பூஜை

தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுவது ஆடி பெருக்கு விழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ந் தேதி இவ்விழா கொண்டாடப்படுவதால் ஆடி பெருக்கு விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் 40ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. கொள்ளிடத்தில் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் கன அடி நீரும் வெளியேறி வருகிறது .

காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் அதிகமாக வருவதால் விவசாயம் உட்பட அனைத்துத் தொழில்களும் சிறப்பாக இருக்கும் என்ற
நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீராதாரம் தரும் காவிரிக்கு நன்றி தெரிவிக்க பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தொடங்கி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஶ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரிக்கரையில் பொதுமக்கள் தலைவாழை இலைபோட்டு காவிரித்தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருட்ள் வைத்து படையலிட்டு, கற்பூர தீபம் காட்டி வழிபடுவர். புதுமண தம்பதியினர் ஜோடியுடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி பூஜை செய்து புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வது வழக்கமாகும். இதேபோன்று திருமணம் ஆன சுமங்கலிகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள் காவிரி தாயை நினைத்து மஞ்சள் கயிறு புதிதாக அணிந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு காவிரிஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால் திருச்சி அம்மா மண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து நிரம்பி வழிந்து ஓடுகிறது. .மேலும் ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மற்றும் அய்யாளம்மன் படித்துறை துறையில் பொதுமக்கள் யாரும் படிக்கட்டில் இறங்காத வண்ணம் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் இரு கரைகளும் தொட்டவாறு காவேரி மற்றும் கொள்ளிடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது பாதுகாப்பான முறையில் ஆடி 18 விழாவை கொண்டாட மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது..

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (02.08.2024)

கோட் படத்தின் Third சிங்கள் இன்று வெளியீடு…..இதெல்லாம் ஒரு ப்ரோமோ …வா நொந்து போன ரசிகர்ஸ்