in

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

 

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.

இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 31-ம்   தேதி  தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அய்யலூரில் ஆட்டுச் சந்தை கூடியது.

அதிகாலை 2 மணி முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது.

மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

இன்று 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு  8500 ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 7000 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 450 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

வியாபாரிகள் சேவல்களை சண்டையிட  வைத்து வாங்கி சென்றனர்.

அய்யலூர் சந்தையில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

பழனி மலைக்கோயிலில் சேதமடைந்த பகுதி புரனமைக்கப்பட்டு இலகு கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை சேந்தங்குடி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நகைகளை திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு