in

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக வட்டச்செயலாளர் உதயகுமார் பேட்டி


Watch – YouTube Click

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என மதுரையில் அதிமுக வட்டச்செயலாளர் உதயகுமார் பேட்டி

 

கறந்தபால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என குறிப்பிட்டு சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கருத்துக்கு அதிமுக மதுரை மாநகர் பகுதி 15 வது வார்டு வட்ட கழக செயலாளர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த வட்ட கழக செயலாளர் உதயகுமார் கூறுகையில் “எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களை போன்ற கட்சிக்காரர்களின் விருப்பம், பல வட்டச்செயலாளர்கள் மனதிற்குள் இந்தக்கருத்தை மறைத்து வைத்துக்கொண்டு வெளியே சொல்ல தயங்குகின்றனர்.

சசிகலாவை சேர்க்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுவது சரியல்ல, கட்சி முன்னேற வேண்டும், அதற்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.

வாய்ப்பிருந்தால் வட்டச்செயலாளர்கள் இணைந்து இந்தக்கருத்தை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் தெரிவிப்போம்” என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

மொஹரம் பண்டிகை முன்னிட்டு பொது விருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

சாராயக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி கடும் எச்சரிக்கை