in

திமுக ஆட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பிளக்ஸ் போர்டு


Watch – YouTube Click

திருச்சியில் திமுக ஆட்சியில் விளையாட்டுப் போட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பிளக்ஸ் போர்டு- கொதித்த அமைச்சர் நேரு- போட்டி நிறுத்தம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இதற்கு பல தரப்பினரிடம் இருந்து ஸ்பான்சர் ஷிப் பெற்று போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உருவம் கொண்ட பிளக்ஸ் போர்டுகள் அண்ணா விளையாட்டு அரங்கில் சாலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரிகளை டோஸ் விட்டார். பிளக்ஸ் போர்டுகளை காணோம் அதிமுக முன்னாள் அமைச்சர் உடைய போர்டுகளை வைத்தது யார் என கோபமாக கேட்டுள்ளார்.

இதனால் சிறிது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.

உடனடியாக அந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் சாலையில் தலைக்குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டன. பிளக்ஸ் போர்டுகள் சில இடங்களில் ஒழித்தும் வைக்கப்பட்டது.

பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மாலை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்க முன்னாள் காவல்துறை அதிகாரி தேவாரம் வருகிறார்.

திமுக ஆட்சி காலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பிளக்ஸ் போர்டு வைத்து விவகாரம் திருச்சி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக திமுக அமைச்சர்கள் யாருடைய ப்ளக்ஸ் போடும் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ப்ளக்ஸ் போர்டு வைத்தது யார் என திமுகவினர் விசாரித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் இல்லம் முன் ஆசிரியர்கள் தர்ணா

திருச்சியில் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் பலி