in ,

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத (துலா விஷு புண்யகாலம்)

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத (துலா விஷு புண்யகாலம்)

 

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத ( துலா விஷு புண்யகாலம் ) பிறப்பை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில்.

இங்கு மூலவா் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணா் அமா்ந்த திருக்கோலத்திலும் , மூல விமானத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகிய மன்னாா் நின்ற திருக்கோலத்திலும் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலர் என மூன்று திருக்கோலங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா்.. இத் திருக்கோவிலில்ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஐப்பசி மாத பிறப்பை ( துலா விஷு புண்யகாலம் ) முன்னிட்டு இன்று காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது. தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது.

பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது. பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா்.

பின்னா் ஸ்ரீராஜகோபாலருக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு ஸ்ரீரம்(பால்) ஸ்ரீசடாாி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுக்கு மூன்று முறை மட்டும் நடைபெறும் மூலவர் ஸ்ரீ வேதநாராயணா் திருமஞ்சனம் ஐப்பசி விஷிவை முன்னிட்டு இன்று நடைபெறுகின்றது. இரவில் ஸ்ரீ ராஜகோபாலா் கருட வாகன புறப்பாடு நடைபெறுகின்றது.

What do you think?

புரட்டாசி மாத சதுர்த்தியை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள்

சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் பெருமாள் மகாலட்சுமி திருக்கல்யாணம்