in

நாகை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்பு ; அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய பாடுபடுவேன் என உறுதி

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜானிடாம் வர்கீஸ் வேறு துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட ஆகாஷ் நாகை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்ற புதிய மாவட்ட ஆட்சியருக்கு வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த மாவட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேரவும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் தனது பணி இருக்கும் என புதிதாக பொறுப்பேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆகாஷ், தொழில்துறை இணை செயலராகவும், தமிழ்நாடு முதலீட்டு வாரிய நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி தற்போது நாகை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

What do you think?

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் ஆடி சனிக்கிழமை பக்தர்கள் சுவாமி தரிசனம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்