in

முறையான போக்குவரத்து இல்லாததால் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்


Watch – YouTube Click

வந்தவாசியில், முறையான போக்குவரத்து ஏற்பாடு கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனம்நெரிசலில் சிக்கிக் கொண்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடிப்பகுதி வங்கிகள் ,வணிக நிறுவனங்கள் உள்ள பகுதி.எனவே எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். மேலும், வந்தவாசி-தின்டிவனம் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. வழக்கமாக வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் வாசல்களில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக தேரடிப் பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் நெரிசலில் வாகனங்கள் சிக்குகின்றன. இந்நிலையில் அந்த வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியது.

எனவே,தேரடிப்பகுதியில்,முறையான போக்குவரத்து வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.மாற்று வழியினை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

மயிலாடுதுறை திமுகவினர் விவகாரம் பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு

முகவர்கள் ஆலோசனை கூட்டம், அதிமுக அமைப்புச் செயலாளர் ஓ எஸ் மணியன் பங்கேற்று ஆலோசனை