in

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் அமைச்சர் ரகுபதி ஆவேசம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் அமைச்சர் ரகுபதி ஆவேசம்

 

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் ; தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆவேசம்

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தில் உள்ள 53 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த 5538 மாணவ மாணவிகளுக்கு 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை, மதுரை, திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் 11 பேருந்து சேவையை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி கூறுகையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதையே அச்சப்படும் நிதியமைச்சர் திருக்குறளையும், பாரதியாரையும் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார்.

மோடியை தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற விடாமல் தடுத்தது இந்தியா கூட்டணி என்று கூறிய அமைச்சர், ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை என்றாலும் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செயல்பட்டு வருகிறார் என பெருமிதம் தெரிவித்தார்.

பீஹார் ஆந்திரா இல்லையென்றால் மோடி இல்லை என்று கூறிய அமைச்சர் அதற்காக அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி ; சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்து குற்றவாளிகள் கைது செயப்பட்டு வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை முடிச்சிப்போட்டு பார்க்க வேண்டாம் என எச்சரித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாநவாஸ், நாகை மாலி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

What do you think?

மின் கட்டண உயர்வை கண்டித்து நாகையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் பட்ஜெட்டால் அடித்தட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை முன்னாள் அமைச்சர் ஒ எஸ் மணியன் விமர்சனம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூதன முறையில் பிச்சை எடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்