in

திருவாரூரில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கத்தினர் தர்ணா போராட்டம்

திருவாரூரில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தப்படித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் அரசாணை 204 – ன் படி ஓய்வூதியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும், அதிக கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிகிச்சை செலவு குறைத்து வழங்கும் காப்பீடு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தப்படித்து நூதன முறையில் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

தெலுங்கானா, சட்டீஸ்கர் மாநில எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் போலீஸ், நக்சலைட்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை.

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை