in

மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் :-

தமிழக அரசு மின் கட்டணத்தை தற்போது உயர்த்தி உள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மக்களவைத் தேர்தலுக்குப் முன்பு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று உறுதி அளித்த தமிழக அரசு தேர்தல் முடிந்த பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மக்களை வஞ்சிக்கும் செயல் என்று பல்வேறு அரசியல் தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்

What do you think?

ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் அவரது நண்பர் கைது செம்பனார்கோவில் காவல்துறை நடவடிக்கை

தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்