in

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

 

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதி மற்றும் திருவானைக்காவல் பகுதியில் அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு முதல் தேவி தியேட்டர் வரை திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில், அதிமுகவினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.

இதில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்தத் துண்டு பிரசுரத்தில் நவம்பர் 2022 ராமேஸ்வரத்தில் ரூ 360 கோடி போதைப் பொருள் கடத்தல் கடத்திய திமுக கவுன்சிலர் புகைப்படம் மற்றும்…

மார்ச் 2024 மதுரை சென்னை ரயிலில் கடத்தப்பட்ட 180 கோடி ரூபாய் போதைப்பொருள் குறித்தும்..

மார்ச் 2024 புதுக்கோட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்தி இருந்த 110 கோடி ரூபாயில் 100 கிலோ போதைப்பொருள் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது குறித்தும்

மேலும் மே 2024 சென்னையில் 3.5 கிலோ ஓ பி எம் கடத்தல் குறித்தும்

ஜூன் 2024 சென்னை விமான நிலையத்தில் ரூ 22 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் உள்ளிட்ட வாசகங்கள் இதில் இடம் பெற்றிருந்தன,

மேலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷசாராயம் குறித்த வாசகங்களும்

65 உயிர்களுக்கு நீதி வேண்டும் சிபிஐ விசாரணை வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் துண்டு பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தமிழகத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடிப்படை காரணமே காமராஜர் ஆட்சி தான்… முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களால் விபத்து