in

மணப்பாறை அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

மணப்பாறை அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கருமலை கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மரியசூசை (எ) சின்ன காளை . கருமலை பெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான வேளாண் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

அப்போது கிணற்றுக்கு மேல் அவரது உடைகள் இருந்ததால் அவர் கிணற்றினுள் தவறி விழுந்துள்ளதை அறிந்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடி தண்ணீரில் மூழ்கி இருந்தவரை தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி உடலை மீட்டனர் .இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல்துறையினர் சின்னக்காளை உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர்…. எதிர்பாருங்கள்.*

இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது