in

அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது

 

பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் விழா பேரூர் பாமக சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

பேரூர் செயலாளர் வக்கீல் சுரேஷ் ஏற்பாட்டில் குத்தாலம் கோகிலம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.தொடர்ந்து குத்தாலம் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்புமணி ராமதாஸ் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது.

இதே போல குத்தாலம் மேற்கு ஒன்றிய பாமக சார்பில் திருவாலங்காடு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் விமல், தொகுதி தலைவர் சந்தானம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் மதன்ராஜ் நிர்வாகிகள் ஹரிஹரன், முருகன், கௌதமன், கண்ணன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடையில் 100 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்த கட்டுமான பணி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக மாநில அம்மா பேரவை சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம்