in

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருமலையில் சாமி தரிசனம்


Watch – YouTube Click

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருமலையில் சாமி தரிசனம்

 

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்ற நாரா சந்திரபாபு நாயுடு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

நேற்று அவர் விஜயவாடாவில் முதலமைச்சர் ஆக பதவியேற்றார்
இதனை தொடர்ந்து அவர் விமான மூலம் திருப்பதிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் சாலை மார்க்கமாக திருப்பதி வழியே வந்த அவருக்கு தெலுங்கு தேச கட்சி பிரமுகர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து திருமலைக்கு வந்த அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள் சிறப்பாக வரவேற்றனர் திருமலையில் இரவு ஓய்வுக்கு பின்னர் நாரா சந்திரபாபு நாயுடு குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசித்தார்.

தொடர்ந்து அவருக்கு ஆலய அர்ச்சகர்கள் வேத ஆசீர்வாதம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு ஏழுமலையான் உருவப்படம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து கொடி மரத்தை வணங்கிய சந்திரபாபு நாயுடு ஏழுமலையான் ஆலயத்திற்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சன்னதி அருகே அக்கண்ட தீபம் பகுதியில் தேங்காய் உடைத்து தமது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிதோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது

தொடரும் அரசின் அலட்சியம் அச்சத்தில் பள்ளி மாணாக்கர்கள்