in ,

அன்னை காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா

அன்னை காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா

 

அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனாய அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னை காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் தாிசனம்.

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. சிறப்புவாய்ந்த இத் திருக்கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

அதன் ஒரு நிகழ்வாக ஆடி மாதத்தில் ஸ்ரீ காந்திமதி அம்பாளுக்கு ஆடிபூரத் திருவிழா கடந்த 29ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தினந்தோறும் காந்திமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

10ம் திருநாளான இன்று இரவு அம்பாளுக்கு முளைகட்டு திருவிழா (சீமந்தம்) அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காந்திமதி அம்பாளுக்கு தாரா அபிஷேகம் நடைபெற்றது. ஹோம குண்டம் வளா்க்கப்பட்டு கும்ப பூஜை நடைபெற்றது.

தொடா்நது கும்ப நீரால் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அா்ச்சகா் கா்பிணிப் பெண்களுக்கு செய்வதுபோல் அம்பாளின் கைக்கு வளையல் போட்டும், காலில் நலுங்கு மஞ்சளும் இட்டனா்.

தொடா்ந்து காந்திமதி அம்பாளின் மடியில் முளைபயிறு கட்டும் வைபவம் சிறப்பாக நடைபெற்றறது. அம்பாள் தன் அழகை காண கண்ணாடி காட்டி திருஷ்டி சுற்றும் வைபவம் நடைபெற்று அன்னைக்கு பாலும் பழமும் அளிக்கப்பட்டது.

தொடா்ந்து பெண்களால் மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது. பக்தா்களின் பக்தி பரவசத்துடன் சோடச தீபாராதனை காட்டப்பட்டது. ஆடிப்பூர திருவிழாவின் நிறைவாக கொடி இறக்கப்பட்டதும் காந்திமதி அம்பாள் தன் புகுந்த வீடான சுவாமி நெல்லையப்பா் திருக்கோயில் சென்றடைந்தாா்.

இந் நிழ்வுக்கு வந்திருந்த பக்தா்கள் அனைவருக்கும் வளையல், முளைகட்டிய பயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. குழந்தை இல்லாத தம்பதியா் இதை வாங்கி உண்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆன்மிக அன்பா்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்.

What do you think?

நாங்குனோி ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் திருக்கோயிலில் திருஆடிப்பூர சிறப்பு திருமஞ்சனம்

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு டோலோஸ்தவம்