in

இராஜபாளையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டது…

இராஜபாளையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம் மீட்கப்பட்டது…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நடைபெற்ற சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கணக்கில் வராத ரூபாய் 14800 கைப்பற்றினார்.

இராஜபாளையம் அருகே உள்ளது சேத்தூர் பகுதி. சேத்தூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதியும்போது வரக்கூடிய பொதுமக்களை மிரட்டி லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைைருக்கு புகார்கள் சென்றுள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சேத்தூரில் முகாமிட்டு சார் பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சேத்தூர் சார் பதிவாளர் கார்த்திகேயன் தனது பணியை முடித்து இருசக்கர வாகனத்தில் கிளம்பும் வேலையில் அவரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரது வாகனத்தை சோதனை செய்தனர். தொடர்ந்து அவரது வாகனத்தில் இருந்து 14800 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த பணத்திற்கு கார்த்திகேயனிடம் கணக்கு கேட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திகேயன் சரியான பதில் அளிக்காத நிலையில் அவரிடம் தங்களது விசாரணையை விஸ்தரித்துள்ளனர்.

கணக்கில் வராத பணம் சார்பதிவாளர் இடம் இருக்கும்போது இது தொடர்பாக ஏகப்பட்ட குழப்பங்கள் வந்த நிலையில் சார்பதிவாளர் கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர் .

What do you think?

திருத்துறைப்பூண்டியில் கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

கீழ்வேளூரில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது