in

இரட்டணை திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜர் ஆலயத்தில் அர்ஜுனன் தபசு மரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டிவனம் அடுத்த இரட்டணை திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜர் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவின் 15-ம் நாள் அர்ஜுனன் தபசு மரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இரட்டணை கிராமத்தில் வீற்றிருக்கும் திரௌபதி உடனுறை தர்மராஜர் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவானது கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 15-ம் நாள் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அர்ஜுனன் தனது எதிரிகளை கொல்ல பகலி என்றும் சொல்லக் கூடிய வில்வற்றாக அம்பை சிவனிடத்தில் வாங்குவதற்காக 40 அடி உயர தபசு மரத்தில் தவம் புரியும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பக்‍தர்கள் மீது வில்வ இலையும், எலுமிச்சை பழங்களும் வீசப்பட்டன. திருமணம் ஆகாத பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி சரடுகளும் வழங்கப்பட்டன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

திருவாரூர் அருகே அரசவனங்காட்டில் தனியார் பஸ் மோதி ஒருவர் பலி

சமூக ஜனநாயகம் கொள்கையை கடைபிடிக்கும் ப.மா.கவை மக்கள் ஆதரவு தரவில்லை