in ,

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது

இவ்விழாவின் நான்காம் நாளான இன்று சந்தன அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக தொடங்கியது,10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இனிப்பு அலங்காரம்,குங்கும அலங்காரம், மஞ்சள் அலங்காரம்,சந்தன அலங்காரம்,மாதுளை அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்,

ஆஷாட நவராத்திரி விழா நான்காம் நாளான இன்று சந்தன அலங்காரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளச்சாராய மரணம் என திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி நீங்கள் சங்கீகளாக மாறிவிட்டீர்களா ?

திருச்சி திருவளர்ச்சோலை அருகே இரு குழுக்களிடையே மோதல். காதல் விவாகரத்தில் 5 பேருக்கு கத்தி குத்து. ஒருவர் பலி.