in

திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் கோவிலில் மகாளய அமாவாசை முன்னோருக்குத் தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம்

திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் கோவிலில் மகாளய அமாவாசை முன்னோருக்குத் தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம்

 

திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு குண்டாற்றில் ஏராளமான பக்தர்கள் முன்னோருக்குத் திதி, தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி யில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் குண்டாற்றில் முன்னோர்களுக்கு
தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி
மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து வழிபடுவது
வழக்கம்.

முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய திருச்சுழியில் திருமேனிநாதராய்
எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ரமணமகரிஷி
பிறந்த இடம் என்பதால் திருச்சுழி சுற்றுலா தலமாகவும் உள்ளது.

திருச்சுழி ஸ்தலமானது காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு
அடுத்தபடியாக ஒரு புண்ணிய ஸ்தலமாக உள்ளது. 14 பாண்டிய ஸ்தலங்களில் 10வது ஸ்தலமாகவும் திருச்சுழி உள்ளது.

மகாளய அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம், திதி கொடுத்து வருகின்றனர்.

மகாளய அமாவாசை காலங்களில் குண்டாற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும், குண்டாற்றில் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுத்த பின்னர், ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான விளக்கேற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், திருச்சுழி நண்பர்கள் தன்னார்வக் குழுவினர் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

துபாய் தொழிலதிபருடன் அனுஷ்கா..வுக்கு திருமணம்