in ,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா

மீனாட்சியம்மன் கோவில் ஆவணி முலத்திருவிழாவில் 6 ஆம் நாள் நிகழ்வாக சிவபெருமானின் திருவிளையாடலான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்தபாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது – ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்

உலகப்பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் நாள்தோறும் சிவபெருமான் நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல் லீலைகளான .கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், உலவவாக்கோட்டை அருளியது. நடைபெற்ற நிலையில் விழாவின் 6 ஆம் நாள் நிகழ்வான சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்தபாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது

குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயதான வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணம் கொண்டவன். அவன் வாள்வித்தை பயிற்சி முடித்து விட்டு, புதிதாக வாள்வித்தை பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தான். அப்போது அவன் ஆசிரியரின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தான்.

இது குறித்து ஆசிரியரின் மனைவி இறைவன் சோமசுந்தரரிடம் முறையிட்டார்.
எனவே இறைவன் ஆசிரியர் வேடத்தில் சென்று, சித்தனை வாள் போருக்கு அழைத்தார். போரில் ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் என ஒவ்வொரு அங்கமாக வெட்டினார்.

சிவ பெருமான். இறுதியில் சித்தனின் தலையையும் வெட்டிக் கொன்றார். இறைவனே ஆசிரியர் வடிவில் வந்து நிகழ்த்திய திருவிளை யாடலை அறிந்த குலோத்துங்க பாண்டியன், வயதான ஆசிரியர் பாணனுக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார். இந்த திருவிளையாடலை திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையிலான சிறப்பு அலங்காரமான கையில் வாளுடன் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சிஅளித்தனர்.

முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

ஆவணி திருவிழாவில் 6ஆம் நாள் நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்

What do you think?

மதுரை தல்லாகுளம் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்

குத்தாலத்தில் திமுக பேரூராட்சியை கண்டித்து போராட்டம்