in

பக்ரீத் பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் சிறப்பு தொழுகை


Watch – YouTube Click

பக்ரீத் பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் சிறப்பு தொழுகை

 

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத்பண்டிகை நெல்லை மேலப்பாளையம் மற்றும் மாவட்ட பகுதியில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடப்பட்டது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது .

நெல்லை மேலப்பாளையத்தில் பஜார் திடல், மாநகராட்சி மைதானம், பாளையங்கோட்டை , கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. தொழுகையில் இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டதுடன் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான ஏழைகளுக்கு உதவுதல் என்பதன் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பணம், இறைச்சி ஆகியவற்றை தானமாக வழங்கினர்.

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் நெல்லை மத்தியமாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு துவா செய்தனர்.

மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் தவ்ஹீத் சமாத் சார்பில் மேலாண்மை குழு உறுப்பின் சம்சுல்ஹா ரகுமானி தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோன்று மாவட்டத்தில் ஏர்வாடி, களக்காடு, பத்தமடை, பேட்டை, என இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பக்ரீதபண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது .


Watch – YouTube Click

What do you think?

பக்ரித் பண்டிகையை முன்னிட்டு திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகை

ரசிகர் மன்ற தலைவரின் இல்ல விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்திக் உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்