in

கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் பா ஜ க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி


Watch – YouTube Click

கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் பா ஜ க மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி

 

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 58 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த ஆண்டு கூட விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் பலியாகினர்.

இதுவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு நேரில் செல்லவில்லை. நிவாரணம் அறிவித்தால் மட்டும் போதுமா. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை. நிவாரணம் என்பது கண் துடைப்பு தான். மக்கள் போராடக்கூடாது என்பதற்காகவே நிவாரணத்தை அறிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டிப்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. சி.பி.ஐ. விசாரித்தால் தான் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட பல உண்மை தகவல்கள் வெளிவரும். ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை என தெரியவில்லை .
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். அதே வேளையில் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்தால் பனைத் தொழிலாளர்கள் பயனடைவர். எனவே பூரண மதுவிலக்கு அமல்படுத்தி கள்ளு கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க வேண்டும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.

முன்னாள் நீதிபதி ஒரு அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்கியுள்ளார். கையில் கயிறு கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் கூறியுள்ளார். ஆனால் ஒட்டுமொத்தமாக யாரும் கையில் கயிறு கட்டக் கூடாது என்று அவர் கூறியது ஏற்புடையது அல்ல என்றார்.


Watch – YouTube Click

What do you think?

 பாஜக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க கூடாது காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

திமுக உடந்தையாக செயல்படுகிறது பாஜக பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் குற்றச்சாட்டு