in

திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். இமெயில் வந்த தகவலால் பள்ளிக்கு விடுமுறை- போலீசார் சோதனை.

திருச்சி திண்டுக்கல் சாலையில், உள்ள ராம்ஜி நகர் அருகே செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்துள்ளது.
மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பொன்னி உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் பள்ளிக்கு பயன்படுத்தக்கூடிய பேருந்து பள்ளியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது பள்ளியின் ஈமெயில் ஐடிக்கு வந்துள்ளதாக முதல் கட்ட தகவலாக தெரிவிக்கின்றது

What do you think?

இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா