in

விமான நிலையத்தில் நடிகர் கருணாஸ்…சிடம் குண்டுகள் பறிமுதல்

விமான நிலையத்தில் நடிகர் கருணாஸ்…சிடம் குண்டுகள் பறிமுதல்

 

சென்னை விமானத்தில் நடிகர் கருணாஸ் நேற்று விமானப்படை அதிகாரிகளால் கைதிசெய்யப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல நேற்று திரைப்பட நடிகரும் முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் விமான நிலையத்திற்கு வந்த போது அவரது கைப்பையை Scan செய்யும் போது உள்ளே 40 துப்பாக்கி குண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இவை கை துப்பாக்கியில் பயன்படுத்தக் கூடிய 0.32mm ரக குண்டுகள் ஆகும்.

இதனை பறிமுதல் செய்து நடிகர் கருணாஸ்… சை விசாரணை செய்த போது என்னிடம் Gun பயன்படுத்துவதற்கான லைசென்ஸ் உள்ளது.

குண்டுகலை விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறை எனக்கு தெரியும் அதனால் கைப்பையில் வைக்காமல் எனது பெட்டிக்குள் அவசரத்தில் வைத்து விட்டேன்.

மேலும் எனது கை துப்பாக்கியை நாம் புதுப்பித்தர்க்கான ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது என்று காட்டினார்.

ஆனாலும் விமான பாதுகாப்பு விதிகளின்படி துப்பாக்கி கொண்டு வர விமானத்தில் எடுத்து செல்வது தவறு என்பதால் நடிகர் கருணாசை திருச்சி செல்லும் விமானத்தில் அதிகாரிகள் அனுமதிக்க வில்லை..

இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கருணாசை கூறியதாவது… தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் எனது கை துப்பாக்கி மற்றும் குண்டுகளை திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டேன்.

குண்டுகள் தவறுதலாக என் பைக்குள் வந்துவிட்டது என்றார் ஒரு மணி நேர விசாரணை…இக்கு பின் நடிகர் கருணாசை அனுப்பபட்டார்.. இவரால் நேற்று விமானம் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

What do you think?

திருவண்ணாமலை காந்தி சிலை அருகே மூன்று கடைகளில் பயங்கரத் தீ விபத்து

முதல்வர் மு.கருணாநிதி 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்