in

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (04.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (04.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

 

மாநில ஓய்வூதியங்கள் அடுத்த ஆண்டு 400 பவுண்டுகளுக்கு மேல் உயரக்கூடும்

டிரிபிள் லாக் என்ற பணவீக்கம் மற்றும் சராசரி ஊதிய வளர்ச்சி ஆகியவற்றில் எது 2.5% உயர்ந்தாலும் ஓய்வூதியங்கள் உயரும். இந்த ஆண்டு ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது, 2016-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் இரண்டாம் நிலை மாநில ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் இவர்களூக்கு ஆண்டுக்கு £300 அதிகரிக்கும். இவை எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஓய்வூதிய அதிகரிப்பு குறித்த முடிவு அக்டோபர் பட்ஜெட்டுக்கு முன்னதாக அமைச்சர் லிஸ் கெண்டால் பரிந்துரைக்கபடும்.

சாரா ஸ்டோரி சைக்கிள் ஓட்டுதலில் தனது 13வது பாராலிம்பிக் தங்கத்தை வென்றார்

பிரிட்டனின் சாரா ஸ்டோரி தனது 18வது விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். ஐந்தாவது பாராலிம்பிக்களுக்கான C5 ரேஸ் கோர்ஸில் வெறும் 14.1 கிமீ நீளத்தை கடந்தவர் – இந்த முறை பெண்களுக்கான சைக்கிள் ஓட்டுதலில் முதல் முறையாக சாரா 22 கிமீ கேம்ஸ் கோர்ஸில் பந்தயத்தில் ஈடுபட்டார். பெண்களுக்கான பிரிவில் ஃபிரான் பிரவுன் வெள்ளி வென்றார்.

பிரெஞ்சு கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் டஜன் கணக்கான புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் மறைந்தனர்.  10 பேர் பெண்கள் மற்றும் இருவர் ஆண்கள் என்று உள்ளூர் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Boulogne-sur-Mer அருகே உள்ள Cape Gris-Nez-ல் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எட்டு பேர் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்ததால் பிழைத்தனர், படகில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால் அதன் அடிப்பகுதி பிளந்து கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.

 கிரென்ஃபெல் பேரழிவு குறித்த இறுதி அறிக்கை இன்று காலை வெளியிடப்படும்

2017 இல் 72 பேரின் மரணத்திற்கு வழிவகுத்த விபத்து பற்றிய ஆதாரங்களைக்களின் அடிபடியில் அறிக்கை 11:00 பிஎஸ்டிக்கு வெளியிடப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து விசாரணைத் தலைவர் சர் மார்ட்டின் மூர்-பிக் பொது அறிக்கை வெளியிடுவார். அடுத்தடுத்த விசாரணையில் கட்டிடத் தொழில், உற்பத்தியாளர்கள் மற்றும் லண்டன் தீயணைப்புப் படையை விமர்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்தொன்பது நிறுவனங்கள் மற்றும் 58 நபர்கள் இந்த தீ விபத்து குறித்த விசாரணையில் உள்ளனர்.

What do you think?

நாமக்கல் பஞ்சமுக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா – லட்சார்சனையுடன் துவக்கம்

அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு கோவில் நகரமான காஞ்சியில் 75 நாட்களில் தயாரிக்கப்பட்ட தங்க ரதம்