in

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்…காவல்நிலையங்களில் காங்கிரசார் புகார்…

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,மாநில காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரியகடை காவல்நிலையத்தில் இன்று ஒரு புகார் அளித்தனர்.அதில்,பாஜக சேர்ந்த தர்விந்தர் சிங் மார்வா கட்சி கூட்டத்தில், ராகுல் காந்தி படுகொலை செய்யப் படுவார் என பேசியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ராகுல் காந்தி நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மத்திய ரெயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு, அமைச்சர் ரகுராஜ்சிங், ராகுல்காந்தி நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி என பேசியுள்ளனர். இதன்மூலம் ராகுல் காந்தி மீது மக்கள் வெறுப்பை உருவாக்கி, கலவரம் ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் வேலைகளை செய்துள்ளனர். இது திட்டமிட்ட சதிவேலை. இதனை
பாஜகதலைவர்கள் இதை கண்டிக்கவில்லை. இதனால் ராகுல் காந்தியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஜம்மு, காஷ்மீர், அரியானா மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் ராகுல் காந்தி மீது வெறுப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட பாஜனதா, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன.

இவர்களின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மன உளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே பாஜனதா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது திட்டமிட்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இந்திய தண்டனை சட்டம் 351, 352, 353 பிஎன்எஸ் சட்டத்தில் 61வது விதியின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

What do you think?

திருவிடைமருதூர் அருகே சனி பகவான் கோயிலில் யாகம் நடத்திய ஜப்பானியர்

புதுச்சேரி..பதப்படுத்தப்பட்ட உணவு,சிவப்பு இறைச்சி,எண்ணையில் பொறித்த உணவு ஆகியவை தான் புற்றுநோய்க்கு காரணம்