in

கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு


Watch – YouTube Click

கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்களை வைத்து மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்துக் கொண்டதாக புகார் உள்ளது.

இந்த நிலையில், பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரியின் அடிப்படையில் மனுதாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நபர் என்பதால், பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் மோசடி செய்தல் உள்ளிட்ட 147, 294(b), 323, 324, 365, 506 (ii) உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாத நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பிரதமர் வீடு முன்பு விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருவாரூரில் அய்யாக்கண்ணு பேட்டி

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி