in

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ஆசிரியர் தின வாழ்த்து

ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கித் தருவதில் தங்கள் வாழ்நாளை செலவிடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

முதலமைச்சர் ரங்கசாமி ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்கள் மீது இந்த சமூகம் வைத்திருக்கும் மரியாதையையும் போற்றுதலையும் எடுத்துக்காட்டுவதாகும்.இது, நமது கலாச்சார மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ள குரு-சிஷ்ய உறவின் பிரதிபலிப்பாகும்.

பெற்றோருக்கு அடித்தபடியாக ஆசிரியர்கள் கருதப்படுவதால்,
ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஆசிரியரின் இடம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

மாணவர்களுக்கு ஊக்கமளித்து, அறிவை ஊட்டி,சரியான பாதையைக் காட்டி, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக உருவாக்க கடினமாக உழைக்கும் அன்பிற்கும்

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிற்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கித் தருவதில் தங்கள் வாழ்நாளை செலவிடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இந்நாளில்,எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் அகம்மகிழ்கிறேன்.
என்று முதலமைச்சர் ரங்கசாமி தனது வாழ்த்து செய்திகள் குறிப்பிட்டுள்ளார்

What do you think?

போலி உயில் தயாரிப்பில் சப் – ரிஜிஸ்டர் அலுவலக ஊழியர்களுக்கும் பங்கு.கைதான மூவர் தடுக்கிடும் தகவல்கள்.

புதுச்சேரி ஆட்சியில் நடைபெறும் ஊழல் முறைகேடு நிர்வாக சீர்கேட்டை தட்டி கேட்க துணைநிலை ஆளுநர் கையில் சாட்டையை எடுக்க வேண்டும்