in

திருச்சியில் ஜூன் 4ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு பாஜகவினர் தங்க மோதிரம் அணிவித்து வெற்றி கொண்டாடம்


Watch – YouTube Click

மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் திருச்சியில் ஜூன் 4ஆம் தேதி பிறந்த 20 குழந்தைகளுக்கு பாஜகவினர் தங்க மோதிரம் அணிவித்து வெற்றி கொண்டாட்டம்…

பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாஜகவினர் கொண்டாட்டம்…

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

1962ம் ஆண்டு முதல் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு எந்த ஒரு பாரத பிரதமரும் நிகழ்த்தாத சாதனையான தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று பாரத பிரதமராக பொறுப்பேற்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 04ம் தேதியன்று பிறந்த 20 – குழந்தைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் தலைமையில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

நத்தம் அருகே கோயில் திருவிழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து

அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன் கார்த்திக் சிதம்பரம் பேட்டி