in

மதுரையில் பிரபல திரையரங்கம் இடிக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் வேதனை

தொடர்ந்து அடுத்தடுத்து இடிக்கப்படும் திரையரங்குகள். மதுரையில் பிரபல திரையரங்கம் இடிக்கப்படுவதால் சினிமா ரசிகர்கள் வேதனை.

மதுரை மாநகர் பகுதியான அண்ணா நகரில் உள்ள பிரபல அம்பிகா திரையரங்க வளாகம் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த திரையரங்கு இடிக்கப்பட உள்ளது. மதுரை சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த இந்த திரையரங்கம், பொழுதுபோக்கு வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது

மதுரையின் பொழுதுபோக்கு வரலாற்றில் அம்பிகா திரையரங்கத்தின் பங்கு மிகப் பெரியது

இந்த திரையரங்கில் பல தொழில்நுட்பங்கள் மதுரையில் முதன் முறையாக டிடிஎஸ் சவுண்ட் உடன் ரட்சகன் படம் மற்றும் 2K, 3K, 4K முறையில் திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாட்ஷா, வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்கள் நூறு நாட்கள் மேலாக ஓடியது.

இதன் சிறப்பு பெயர் இன்றைக்கும் அம்பிகா சினிமாஸ் என்றே கூறுவர்.

இன்றைக்கு திரையரங்குகளில் கேண்டினில் அதிகமான விலைக்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்து வரும் நிலையில், இன்றும் மலிவான விலைக்கு பாப்கார்ன் மற்றும் கோன் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது.

அம்பிகா திரையரங்க வளாகம் முழுவதும் இடித்து பெரிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், இந்த திரையரங்குகளில் ஒரு இலட்சம் சதுர அடியில் பெங்களூர் இன்ஜினியரிங்கள் மூலம் சிறப்பு வாய்ந்த ஷாப்பிங் பில்டிங் கட்ட முடிவு செய்ததாகவும், வெகுவிரைவில் திரையரங்கம் மூடப்பட உள்ளது. 18 மாதங்களில் இந்த திரையரங்கு வளாகத்தில் புதிதாக 5 மேல் தளங்கள், 2 கீழ்த்தலத்துடன் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து வருகின்ற வெள்ளிக் கிழமை அன்று ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும், திரையரங்கம் முன்பு செல்போனில் செல்பி எடுத்து கடைசியாக நினைவுகளை பகிர வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை அனைவரும் நினைவுகளை பகிருமாறு திரையரங்கம் உரிமையாளர் ஆனந்த் கேட்டு கொண்டார்.

தற்போதைய தமிழ் சினிமாவின் சூழல் மிகவும் பின்னோக்கி செல்கிறதா.? தொடர்ந்து முக்கியமான திரையரங்குகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறதா.? என்ற கேள்வி தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

What do you think?

திருவலஞ்சுழியில் கொலை மற்றும் தற்கொலைக்கு நீதி கேட்டு சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணியபுரம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மின்வாரிய ஊழியர்களால் பரபரப்பு