in

கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் காவலர்

கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எப் காவலர்

பாலிவுட் Atom Bomb கங்கனா ரணாவத்தும் சர்ச்சையும் பின்னிப்பிணைந்து வாழ்பவர்கள்.

இவர் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக இமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிட்ட முதல் பாலிவுட் பிரபலம்.

ஐந்து லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றார். டெல்லி செல்ல சண்டிகர் விமான நிலையம் வந்த இவரை சிஐஎஸ்எப் லேடி காவலர் சோதனை யின் போது திடீரென்று கங்கனாவை கன்னத்தில் அறைந்தார் .

விமான நிலையம் சிறிது நேர பரபரப்பானது. இந்த வீடியோவை சமுக வளை தளத்தில் வெளியிட்டார் கங்கனா.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது விளக்கம் அளித்த பெண் காவலர் வெறும் 100 ரூபாய் காசு..க்காக விவசாயிகள் வருட கணக்கு டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கங்கனா கூறியுள்ளார்.

அந்தப் போராட்டத்தில் என் அம்மா வருட கணக்கு போராடிக் கொண்டிருக்கிறார். விசாயிகளின் வலி இவருக்கு தெரியுமா? இவரால் இந்த போராட்டத்தில் உட்கார்ந்து போராடமுடியுமா? அதனால் தான் அறைந்தேன் என்று விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

What do you think?

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி அதிபர் ராமோஜி ராவ் மறைவு

ஹாரா movie review….மகளின் மரணத்திற்காக போராடும் தந்தை