in

திருச்சி திருவளர்ச்சோலை அருகே இரு குழுக்களிடையே மோதல். காதல் விவாகரத்தில் 5 பேருக்கு கத்தி குத்து. ஒருவர் பலி.

திருச்சி திருவளர்ச்சோலை அருகே இரு குழுக்களிடையே மோதல். காதல் விவாகரத்தில் 5 பேருக்கு கத்தி குத்து. ஒருவர் பலி.

திருச்சி திருவானைக்காவல் அருகிலுள்ள திருவளர் சோலையைச் சேர்ந்தவர் நெப்போலியன் (29) இவர் நேற்று மாலை, நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த 10 பேர் அவர்களை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தி காயப்படுத்தினர். இதில் நெப்போலியன், கதிரவன் (34), சங்கர் குரு(35), கமலேஷ்(18) உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு சமூகத்தை சேர்ந்த நாகேந்திரனும் காயமடைந்தார். 6 பேரும் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில், நெப்போலியன் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்யக்கோரி மருத்துவமனை முன்பு நெப்போலியன் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட் டனர்.

அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின், முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

What do you think?

-1 Points
Upvote Downvote

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர்