in

நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

நெல்லை மாவட்டம் ரெட்டியார்ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருக்கும் அரசு மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வாக்கு சாவடிகளை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக நெல்லை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட பின் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2025 ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் ஆகியோரிடம் இருந்து வாக்குச்சாவடிகள் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறுவதற்கு வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சி தலைவருமான கார்த்திகேயன் வெளியிட அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1486 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 307 வாக்குச்சாவடிகளும் அமைந்துள்ளது என தெரிவித்தார்.இதில் 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றுதல், வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மாற்றம், கட்டிட மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளின் பெயர் திருத்தம் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் நெல்லை சட்டமன்ற தொகுதியில் மட்டும் இரண்டு அமைந்துள்ளது அதனையும் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இது தவிர நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்

What do you think?

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் உறியடி உற்சவம்

London பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (29.08.2024) | Britain Tamil Europe News | UK News | London News