in

மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு

மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் மனு

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் அழகு சிறை கிராமத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும், அதற்கு காரணமாக உள்ள நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ பசுமை பொதுநல மக்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று புகார் மனு அளித்தனர்.

குறிப்பாக திருமங்கலம் அழகுசிறை வாகைகுளம் கண்மாயில் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. அரசுக்கும் பொதுமக்களுக்கும் இழப்பை ஏற்படுத்துவதோடு மணல் கொள்ளையை தட்டி கேட்டவர்களை பயங்கர ஆயுதங்களை காட்டியும் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், மேலும் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அழகு சிறை கண்மாயில் காட்டு விவசாயமும் மணல் கொள்ளையும் செய்து வருகிறார்கள் எனவும் சந்திரன் என்பவரது மகன் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

What do you think?

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு தவாக தலைவர் வேல்முருகன் அடுக்கடுக்காக கேள்வி?

நாட்டரசன் கோட்டை ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்த வாரி