in

மத்திய சிறையில் மோதல்; தண்டனை கைதியை, விசாரணை கைதிகள் 10 பேர் கற்களால் தாக்கியதால் பரபரப்பு

மத்திய சிறையில் மோதல்; தண்டனை கைதியை, விசாரணை கைதிகள் 10 பேர் கற்களால் தாக்கியதால் பரபரப்பு

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதி, விசாரணை கைது என 325 பேர் உள்ளனர். இந்த நிலையில் தண்டனை கைதிகளான மர்டர் மணிகண்டன், தமிழ்மணி இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது‌. இதையடுத்து இருவரையும் சிறை வார்டன் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தமிழ் மணியை, விசாரணை கைதிகள் 10 பேர் ஒன்று சேர்ந்து கற்களால் சராமாரியாக தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதை பார்த்து சிறை வார்டன் விரைந்து வந்து, விசாரணை கைதிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்பு காயம் அடைந்த தமிழ்மணியை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. புதுச்சேரி மத்திய சிறையில் தண்டனை கைதியை விசாரணை கைதிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What do you think?

வில்லியனூர் ஸ்ரீ தென்கலை வரதராஜ பெருமாள் ஆலயத்தின் தங்கத்தேரின் மரத்தேர் வெள்ளோட்டம்

மதுரை மாடக்குளம் அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து தர்ணா